அறிவானது மெய், நாக்கு , முக்கு, கண், செவி, என்னும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே ஒரறிவுயிர், ஈரறிவுயிர்,முவறிவுயிர்,நாலறிவுயிர்,ஐயறிவுயிர்,ஆறறிவுயிர் என அறுவகைப்படும்.
புல்லும் மரமும் முதலியவை (மெய்) பரிசத்தை அறியும் ஒரறிவுயிர்கள்
இப்பியும் சங்கும் முதலியவை (மெய்) பரிசத்தோ டு இரதத்தையும் (நாக்கு) அறியும் ஈரறிவுயிர்கள்
கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டுனோடு கந்தத்தையும் (முக்கு) அறியும் முவறிவுயி்கள்.
தும்பியும் வண்டும் முதலியவை அம்முன்றினோடு உருவத்தையும் (கண்) அறியும் நாலறிவுயிர்கள்
விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் (காது) அறியும் ஐயறிவுயிர்ள
அவ்வைந்தனோடு சித்தத்தால் அறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள் ்
கலாநிலையம்